 |
கவிதை
தூரிகையாய் கௌசல்யா
பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேணும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேணும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேணும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேணும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேணும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேணும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேணும்....
- கௌசல்யா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|