 |
கட்டுரை
தமிழன் கனவு காசி ஆனந்தன்
பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!
தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்
கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்....
கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும் போதாதோ?
ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய
மேவியவள் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்
நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து
மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|