 |
கவிதை
அத்தை பெண்கள் என்னும் அழகிகள் கார்த்திக் பிரபு
1.
சிறு வயதில் நீ எனக்கு பரிசளித்த
ஒரு அழகிய மயிலிறகை இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன் என்றெனக்கு திருப்பி தருகிறாய்
நீ எனக்கு கிணற்றடியில் கொடுத்த முத்தத்தை
இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேனென
திருப்பித் தர முயன்ற போது ஓடி ஒளிகிறாய்
என்னடி நியாயம் இது??
2.நம் வீட்டில் நிகழும் திருமண விழாக்களில்
மாப்பிள்ளைத் தோழனாகவோ பெண்தோழியாகவோ
நிற்க நீயும் நானும் சண்டையிட்ட நாட்களை
நினைவுப் படுத்துகின்றன நம் திருமணத்தின் போது
என் அக்கா, அண்ணன் குழந்தைகள் சண்டையிட்டது..
3.எங்கே காதலிக்க வாய்ப்பில்லாமல் நமக்கு
திருமணம் செய்து வைத்து விடுவார்களோ
என்று பயந்து உன்னை வெறுப்பது போல
நானும் என்னை வெறுப்பது போல நீயும்
நடித்து யாருக்கும் தெரியாமல் காதலித்த
அந்த நாட்களை காதலுடன் நினைத்துக் கொள்கிறோம்
நாம் இப்போதும்..
- கார்த்திக் பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|