 |
கவிதை
பிராணிகள் புணரும் காடு கார்த்திக் பிரபு
கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..
கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசை தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு.......
- கார்த்திக் பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|