 |
கட்டுரை
மழை கற்பனை பாரதி
சூரியனால் கடலில் களவாடி
கரும்பந்தாய் உருமாறி
மலை மீது மோதியதால்
நிலைகொள்ளா தடுமாறி
தலை மீது விழறாயோ...
அலை உள்ள உன் கடலம்மா
வலை போட்டு எம்மை
காரமாய் தின்றதற்கு
பரிகாரமாய் எம்மீது
கரிசனமாய் நீ விடும் கண்ணீரோ...
மீதி இருந்த மழலைகளை
நாதியில்லா மனிதர்களே
ஜாதி மத பேதமின்றி
தாதி போல கவனித்தாரே..
அதை கண்டு நீ விடும்
னந்த கண்ணீரோ....
பல காலம் கடல் வேலை..
சில காலம் தங்கியிருக்க
தாய் நாடு வந்தவுடன்
பேய் போல வேகமாய்
நிலமான காதலியை
பலமாக தழுவிகொண்டு
ஒப்பாரி வைக்கிறாயோ...
- கற்பனை பாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|