 |
கட்டுரை
அவதார மோகினிகள் கற்பனை பாரதி
நூறுசத ஆணோ, பெண்ணோ
பிறப்பதில்லை இவ்வுலகில்
தாயின் உணர்வு சில வீதம்
தந்தை உணர்வு சில வீதம்
எந்த உணர்வு மிகுதியோ
அந்த உணர்வே பாலாகும்.
அவதார மோகினிக்கும்
அர்த்த நாரி இறைவனுக்கும்
அர்த்த மண்டபத்தில் இடமுண்டு..
அரவாணிகளின் நர பிறப்போ...
நரகமான இந்நகரத்தில்.....
உடம்பும் மனமும் மாறி விட்டால்
தொடங்கி விடும் அவமானம்
இடமே இல்லை உலகத்தில்..
அங்கம் மாறி பிறந்ததாலே
எங்குமில்லை அங்கீகாரம்...
தங்கள் வெறுப்பை அவர்களெல்லாம்
தங்கம் போல சேர்த்து வைத்து
எங்கோ இருக்கும் இறை மணந்து
கூவாகத்தில் தாலி அறுத்து
கேவி கேவி அழுகின்றார்.....
கோவேறு கழுதைகளாய்...
குறிகள் தவறிய இலக்குகளாய்!!!
- கற்பனை பாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|