 |
கவிதை
ஐய்யனாரு சாவதில்லை கண்ணன்
முட்ட வந்த கெடாவ
எட்டி உதைக்கப் போன என்னைய
தடுத்துவிட்டு
ஆத்தா சொல்லுச்சி
"கூடாதய்யா அது ஐய்யனாரு"
கூழு ஊத்தின நாளப்போ
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி
"ஆத்தா ஐய்யனாரு
செத்துப் போச்சுன்னேன்"
"இல்ல மவராசா
அந்தா பாரு"ன்னு
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா
கைய நீட்டிச்சி என் ஆத்தா
- கண்ணன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|