 |
கட்டுரை
முதல் மதிப்பெண் கதிர்மொழி
எல்லோரும்
அது குறித்து
அழுது முடித்து
எதேச்சையாகவோ அல்லது
கட்டாயமாகவோ
மறந்து விட்ட சூழலில்
இன்று தான் சாவகாசமாய்
அங்கு சென்றேன்.
சாயம் போனதாய்
சில எழுத்துக்கள் அழிந்ததாய்
கிடந்தது
முதல் மதிப்பெண்ணிற்குரிய அட்டை
பெற்றோர் கையொப்பத்தில்
அழுத்தப்பட்ட கைநாட்டு
ஒழுகியிருந்தது
அன்றுதான்
அது குறித்து
முதன் முதலாய்
அழ ஆரம்பித்திருந்தேன்.
- கதிர்மொழி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|