 |
கவிதை
பிணந்தின்னும் கிழவியின் மைந்தர்கள்
ம.ஜோசப்
முதன் முதலில் அத்தையிடந்தான்
அந்த பிணந்தின்னும் கிழவி
பற்றிய கதையைக் கேட்டாள்.
என்றைக்குமான
பயத்தையும், பயங்கரத்தையும்
அக்கிழவி, அவளது மனதின்
அடியாழத்தில் புதைத்துவிட்டாள்.
அக்கால இரவுகளில்
பயந்து அரற்றிக்கொண்டேயிருந்தாள்.
பெண் வாசத்தைக் கண்டவுடன்
தின்றுவிட வந்துவிடும் கிழவி குறித்து
பயங்கள் கவ்விக் கொண்டிருக்கின்றன,
இப்போதும்.
அக்கிழவியின் மகன்தான்,
அவள் கணவன் என்பதை
அவள் அறிந்திருக்கவில்லை, இன்னமும்.
அவளின் மைந்தர்கள்,
எங்கும், எப்போதும் பதுங்கியுள்ளனர்,
எப்பெண்னை எப்போது தாக்கலாமென?
- ம.ஜோசப் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|