 |
கட்டுரை
யாருமற்ற அறையில்
ம.ஜோசப்
தனியாக,
யாருமற்ற அறையில்
ஒரு பெண் பேசும் குரல் கேட்கிறது.
அவள் அழுவது போலுமுள்ளது.
குளித்துக் கொண்டிருக்கும் போது,
அக்குரல் கேட்டு,
ஓடிவந்து பார்க்கின்றேன்.
யாருமில்லை!
எங்கே போனாள்?
என்ன பேசினாள்?
பயம் பிடித்துக் கொண்டது,
அடிக்கடித் தோன்றும் பெண் இவள்.
எனக்கு தெரிந்தவள் போல்தானுள்ளது.
இரவுகளில் அருகே உள்ள அறைகளில்
அரற்றியபடியே, பேசியபடியே,
கேவிக் கேவி அழுதபடியே உள்ளாள் அவள்.
ஒரு நள்ளிரவு பேச்சுச் சத்தம் வந்த அவ்வறையை
மிகுந்த தைரியத்துடன் திறந்து பார்த்தேன்.
என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில்,
பயங்கரங்களை எதிர்கொள்ளும்
பயம் பீடித்திருந்தது.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|