 |
கட்டுரை
தேவதையின் பரந்த கரங்களில்…
ம.ஜோசப்
மலைகளில் கம்பீரங்கள்
காணாமல் போயிருந்தன.
சாலைகள் கரைந்து
போய்விட்டிருந்தன.
நதிகளின் வெற்று
ஆற்று மணலும், வெறுமையும்
யாரும் அறியாவண்ணம்
பதுங்கிக் கொண்டது.
மனிதனும், அவன்
சிறுமையும், ஆணவமும்,
குரூரமும், இரக்கமும்,
இன்ன பிறவும்
உறங்கிக் கிடந்தன,
மிருகத்தின் களைப்புடன்.
நகரமும், அதன் பேரிரைச்சலும்
இரும்புத் தடியால்
அடக்கப்பட்டிருந்தது.
சமுத்திரத்தின் பிரமாண்டம் அதன்முன்
ஒளிந்து கொண்டது,
சில சலனங்களை மட்டும் ஏற்படுத்தியபடி.
அந்தத் தேவதை பூமியெங்கும் தன்
பரந்த கரங்களை விரித்து மூடியிருந்தாள்.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|