 |
கட்டுரை
பெய்து கொண்டிருந்த மழையும்,
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலும்...
ம.ஜோசப்
கடலையும், மழையையும்
அருகருகே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நினைத்து, நினைத்து
அழும் குழந்தைபோல்
நினைத்தவுடன் மழை
பெய்யும் பிரதேசமாயிருக்கிறது.
கடல் ஆர்ப்பரித்து, அலைகளை
உருவாக்கிக் கொண்டிருந்த
வண்ணமேயிருந்தது.
தனியனாய் கடலை
பார்த்த வண்ணமேயிருந்தேன்.
வறண்டு போன ஆறும்,
அதன் குடிகளாகிய என் மக்களும்
என் மேல் படர்ந்து கொண்டனர்.
பல காதங்கள் கடந்து அழும்
என் குழந்தையின் குரல் கேட்க ஆரம்பித்தது.
கடல் ஆர்ப்பரித்தபடியே,
மழையும் பெய்தபடியே, இருந்தன.
அவைகளுக்கு என்னிடம் யாதும் இல்லை.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|