 |
கவிதை
நண்பனாய்...! செல்வராஜ் ஜெகதீசன்
எதற்கும்
நேரமில்லை
என்கிறாய்.
இரண்டு முறை
ஒரு படத்தைப்
பார்த்தேன்
என்கிறாய்.
எது குறித்தும்
எப்படியும்
எக்களிக்க
முயல்கிறாய்.
முழுதாய் பேசுவதற்குள்
மூக்கை மூக்கை
நுழைக்கிறாய்.
முன் அபிப்பிராயமின்றி
முழுதும் கேட்க
மறுக்கிறாய்.
எழுதிய கவிதை
எல்லாம்
எவளை வைத்து
என்கிறாய்.
எத்தனை
வருடங்களாய்
இப்படியே
இருக்கிறாய்.
இருந்தும்
இருக்கிறாய்
இன்னமும்
என்
நண்பனாய்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|