 |
கட்டுரை
கவனிப்பின் கணம் இசாக்
எப்போதாவது தான் அமைகிறது
பிரச்சினையில்லாமல் பயணமாகிற சூழல்
ஓய்வற்ற ஓய்வாகவே
ஒவ்வொரு பயணமும்
மகிழ்ந்த முகத்தோடு
சுடுநீர்
சுவைகுறையாத தேனீர்
உணவுகளில்
'பிள்ளைக்கு பிடித்ததென' அம்மா
'அவருக்கு விருப்பமென' துணைவி
'கூடப்பொறந்தான்
கூடுதலா சாப்பிடுவானென' உடன்பிறந்தார்
வகைவகையாக பரிமாறுகிறார்கள்
எப்படியும்
திரும்பிவிடுவேனென்ற நம்பிக்கையில்
கவனிப்பாரெவருமற்று கிடக்கும்
அப்பாவைக் காண்கையில்
மீண்டும் உறுதியாகிறது
தூரப்பயணம்.
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|