 |
கட்டுரை
கடிதம் பற்றி இசாக்
சில மாதங்களைக் கடந்த பின்னும்
கேட்கிறாள்
'அந்த கடிதம் கிடைச்சிச்சாங்க?'
அவள்
எதிர்பார்க்கும் விடை
என்னிடமில்லை இப்போதும்.
அக்கடிதத்தின் முக்கியத்துவத்தையும்
இழப்பின் வலியையும்
எப்படியுணர்வார்கள் அவர்கள்
எப்படியும்
என்னிடம்
சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை
அவளுக்கிருந்திருக்கலாம்.
காப்பாற்றும்
கடமையுணர்வு
இந்திய அஞ்சல் துறைக்கோ
அமீரக அஞ்சல் துறைக்கோ
இல்லாமல் போனதற்கு
நானென்ன செய்துவிட முடியும்
கவிதை ஒன்று எழுதலாம்
காணாமல் போன கடிதம் பற்றி.
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|