 |
கட்டுரை
பிணமான பொழுதில் இசாக்
வாழும் வழியனைத்தையும்
தொலைத்து
போராடி மீட்டெடுக்கவும்
துணிவற்று
செத்துக் கிடந்தேன் நேற்று.
முகமும்
முகவரியும்
அற்றவன் நானென்பதால்
என்னை
யாரென்று
அடையாளம் காணவும்
முடியாது திணறியது மனிதம்..
என்னை
புதைத்துவிட முயன்றவர்களுக்கு
தோல்வி
எனக்கென
ஓரடி மண்ணும்
உரிமையானதாக இல்லை.
எரித்து
அழிக்க முனைந்தவர்களுக்கும்
தோல்வி
இயற்கை வளங்களெதுவம்
எனக்கென்று இல்லை.
நாற்றமெடுக்க கிடக்கும்
எனக்கு
நேற்று வரை தெரியவில்லை
உரிமை
உடமை என்பதற்கான மதிப்பு.
கொத்தித் தின்ன
அந்நிய பருந்துகள் வருமென
காத்துக் கிடக்கிறேன்
உலகமயப்பட்ட பிணமாக.
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|