 |
கட்டுரை
நான் என்னும் நாண் இசாக்
நீ
என் மீது எப்போதும்
அக்கறையோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்
அதனால்தான்
நீ
என் கால்களில் சுற்றிய
சங்கிலியை
கொலுசென
அறிமுகம் செய்தேன்.
நீ
எப்போதும்
என் வளர்ச்சியை விரும்புவதாக
நம்புகிறேன்
இப்போதும்
அதனால்தான்
நீ
என் கைகளில் மாட்டிய
விலங்குகளுக்கு
வளையலென
புதுப்பெயர் சூட்டிக்கொண்டேன்.
நீ
எப்போதும்
எனக்காக இயங்குவதாக
நம்புகிறேன்
இப்போதும்.
அதனால்தான்
நீ
என் செயல் தடுக்கயிட்ட
சிக்கல் முடிச்சுகளுக்கும்
தாலியென
சமாதானம் செய்துக்கொண்டேன்.
நீ
எப்போதும்
என் நினைவோடு இருப்பதாக
நம்புகிறேன்
இப்போதும்.
அதனால்தான்
உன்
உள் மனசறிந்தும்
சேவையாற்ற
கடமைப்பட்டவளாக இருக்கிறேன்
நான்.
நீ
எனக்கு
முகமொன்று இருக்கிறதெனவும்
ஏற்க மறுக்கிறாய்.
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|