 |
கட்டுரை
சாலை என்ற தவம் இசாக்
இயங்குதல் என்பது
நகர்தல் மட்டுமா.?
சோர்ந்த மனசோடு
ஊர்கின்றார் சிலர்
புணி நிமித்தமாக
நடக்கின்றார் சிலர்
வெற்றிக் களிப்போடு
விரைந்து செல்கின்றார் சிலர்
தேவையின் போது
நடந்தோடுகின்றார் சிலர்.
அவசரம் கருதி
வேகமாகவும்
ஓடுகின்றார் சிலர்
ஊர்திகளிலிலும்
இப்படியான இயங்குதலுண்டு.
தாங்கிய தழும்புகள் சிரிக்க
ஏதுமறியாதது போல
அதிர்வுகளற்று
அப்படியே கிடக்கின்றன
சாலைகள்.
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|