 |
கட்டுரை
முடிவு இசாக்
‘என்ன தோழர்..
துபாய் வாழ்வு
எவ்வளவு காலம்தான் போகும்’ என்றார்
எதிர்காலம் குறித்த கவலையோடு
நண்பரொருவர்.
‘இந்த ஒரு பயணம்
சென்று திரும்பியதும்
இங்கேயே
தங்கிவிட திட்டம்’ என்றேன்
முந்தைய பயணங்களின் போது
சொல்லிச் சென்றதை போல.
என் தனி வாழ்வின் முடிவுகளும்
என்னால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை
எப்போதும் எதிலும்.
ஒரு பலி ஆட்டை போல
நகர்த்தக் கற்றுக்கொண்டேன்
நாட்களை!
- இ.இசாக், துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|