 |
கவிதை
தீப்பிடிக்கும் வழித்தடங்கள் இளம்பிறை

செடி பார்க்கச்சொல்லி
‘சுவற்றில் பல்லிபாரெ’ன
பார்வை திருப்பி
மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து...
குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச்செல்லும்
தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.
எத்தனையோ மைல்கற்களுக்கப்பால்
செய்யும் அமைதியற்ற வேலைகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கும்
அந்த கேவல் சத்தம்.
- இளம்பிறை
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|