 |
கட்டுரை
கனவில் மட்டுமே கோவி. லெனின்
அன்றைய இரவின்
கனாவிலே
வெட்டவெளியில்
வேர்விட்டு
பூமிக்குள் பூக்கின்ற
மரம் கண்டேன்.
கரை வந்த அலைகள்
கடல் திரும்பா
நிலை கண்டேன்.
சிறகு முளைத்த
விலங்குகளும்
கொம்பு முளைத்த
பறவைகளும்
விலங்கியல் பூங்காவில்
ஊர்வலம் வந்தன.
மேற்கில் உதித்து
கிழக்கில் மறைந்தது
மாற்றம் விரும்பிய
சூரியன்.
எல்லாவற்றையும் விட
ஆச்சரியம் தந்தது... ...
சாதி அரிவாள்களின்
பயமின்றி உலவிய
காதல் இதயங்கள்
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|