 |
கட்டுரை
ஊரில் இல்லாத நாளில் கோவி. லெனின்
நாள்தோறும்
பூ வாங்கும் கடையில்
தானாகவே நிற்கிறது
எனது வாகனம்.
நினைவுகளில்
நீ இருப்பதால்
நீ ஊரில் இல்லை
என்ற ஞாபகம்
எனக்குத்தான் இல்லை.
என் வாகனத்திற்குமா?
கொட்டிக் கிடக்கும்
கோடிப் பூக்களை
ரசிக்கவில்லை மனது
எத்தனை மலர்கள்...
எத்தனை நிறங்கள்...
அத்தனை பூக்களும்
அழுவது போலவே
இருக்கிறது.
பூக்கள் மீண்டும்
சிரிக்க வேண்டும்
உடனே
ஊர் திரும்பி வா!
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|