 |
கட்டுரை
கண்ணீர் சிறகுகள் கோவி. லெனின்
உருண்டு விழும்
உன் கண்ணீர் துளிகள்
கவலையின் அளவைக்
கணக்கிட்டு
சொல்கின்றன.
அடுத்த முறை
கண்ணீர் காணநேர்ந்தால்
அது ஆனந்தத்தின்
அளவுகோலாக
இருக்கட்டும்.
கவலைப்படுகையில்
பாறாங்கல்லாய் இறுகும்
மனது
அழுது முடிந்தபின்
பறவையாகிவிடுகிறது.
நீயும் பறவையாக
வேண்டும்
நீ பறப்பதற்காகவே
எப்போதும்
பகலாக்கி
வைத்திருக்கிறேன்
என் வானத்தை.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|