 |
கவிதை
தன் வாலைத் தானே விழுங்கும் தறுதலை உடும்பு
தமிழாக்கம்: புதுவை ஞானம்.
காலத்துக்கு எதிரானதோர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது!
நமக்குள் ஒருவன் என மனிதர்கள் உணர்ந்தால்
உண்டாகும் மாற்றங்கள் மேலும் மேலும்.
ஒரு முட்டாள்தனமான
சுயநலத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட
“அவர்களை” அழிப்பதன் மூலம்
“நம்மை” - யும் அழித்துக் கொள்வதும்
“நாம்” என்பதும் “அவர்கள்” என்பதும் கடக்கப்பட்டு
மனித இனத்தின் முழுமையாய் மாற வேண்டும்
என்பதும் புலப்படும்.
யுத்தம் தொடருகையில் இரு அணிகளுமே
ஒன்றையொன்று ஒத்ததாகவே
காட்சியளிக்கின்றன.
தன் வாலைத் தானே விழுங்குகிறது
தறுதலை உடும்பு.
முற்றிலும் சுழலுகிறது காலச்சக்கரம்
நாமும் அவர்களும் ஒருவருக்கொருவரின்
நிழல்கள் என்பதை நாம் அறிவோமா?
நமக்கு அவர்கள் அயலார் என்பது போலவே
அவர்களுக்கு நாம் அயலார்
என்பதை அறிவோமா?
எப்போது விலகும் மறைத்திட மூடிய மாய இருள்?
எப்போது மாறும் சாடைப்பேச்சுகள்
கேளிக்கையாக?
இன்னமும் கூட தொழுநோயாளிகளை
முத்தமிடுகின்றனர் பாதிரியார்கள்.
தொழுநோயாளிகள் பாதிரியார்களை
முத்தமிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மூலம்: R.D.LAING
தமிழாக்கம்: புதுவை ஞானம்.
புதுவை ஞானம் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|