 |
கவிதை
மனிதர் அனேகர்...
சோழ. நாகராஜன்
பகலும் இரவுமாயும்
ஓட்டமும் உறக்கமுமாயும்
உணவே
பிரதானமெனக்கொண்டு
உருளுகிறது
வாழ்க்கை.
பலரும்
பலவிதமாக
வாழ்ந்து பார்க்கவே
யத்தனிக்கிறார்கள்.
இருந்தும் -
வாழ்க்கையென்னவோ
அதன் போக்கிலேயே
அடியெடுத்துவைத்து
அரற்றுகிறது.
சமூகமாக
வாழ்கிற விலங்காம்
மனிதன்.
சமூகத்துக்காக
வாழ்வதாகவும்
சிலர்
சிலாகிக்கிறார்கள்.
இருந்தும்
என்ன செய்ய?
விதம்விதமான
மனங்களைச்
சுமந்துகொண்டும்
மனங்கள் முழுவதிலும்
ரணங்களைச்
சுமந்துகொண்டும்
வாழத்தான் செய்கிறார்கள்
மனிதர்
அனேகர் இங்கே -
இதயமற்றவர்களிடம்
சதா
இரக்கத்தை
வேண்டினபடி...
எதிரிகள் எவர் என்று
தெளியவும்
தெரியாதபடி...
- சோழ. நாகராஜன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|