 |
கட்டுரை
சிறகுகளின் சாவி புகாரி
கண்ணீரைக்
கண்ணீரால் சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு
நீ என்னை
நானாக்கியபோது
என் சிறகுகளின் சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்
பின்னொரு நாளில்
ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும் கலையை
நானே அறிந்திருப்பது
அவசியமென்று
அறிந்துகொண்டேன்
- புகாரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|