|
கட்டுரை
மரண வாக்குமூலம் பாஷா
என் கதவுகளை உடைத்து
உன்னை நோக்கி
என்னில் அடைத்து வைத்திருக்கும்
உன் சித்திர கலவைகள் சிதறுகிறதே
சேகரித்தாயா?
என் வறண்ட பாலைவனத்தில்
உன் காதல் நீருக்காய்
அலைபாய்ந்த என் ஆசைகளை
பிச்சைக்கார குரலின் நிராகரிப்பாய்
நீ தூக்கி ஏறிந்த நிமிடங்களை
என் கடிகாரத்தில் நான்
காணவேயில்லை.
கண்டாயா?
என்
இதயம் முழுவதும் உன் பெயர் நிரப்பியிருந்தும்
இது ஒரு விபத்தென்றே என்னால்
பொய் சொல்ல முடிகிறது
என்ன செய்வது....
எரிந்த நிலையிலும் என்னால் உன்னை
வெறுக்க முடியவில்லை!
- பாஷா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|