 |
கட்டுரை
கடைசி துளி பாஷா
மெல்லியதாய் மௌனத்தை
துளைத்துவிழும் மழை சாரலின்
பிந்தின ஜாமத்தில்
விந்தின் துளியொன்று
கை கால் முளைத்து
கட்டிலின் காலமர்ந்து
பாலூட்டுகின்றது!
மங்கலாய் எரியும்
மஞ்சள் விளக்கில் தெரியுமிந்த
நான்கு சுவர்களுக்கு
நான் சொல்லிய
கதைகள் ஏராளம்!
கதையின் நாயகர்களை
காணக் கிடைத்த
சுவர்களின் கண்களில்
சளியும் எச்சிலும்!
மனித ஒலிகள் மறந்து
நொடி முள்ளின் மொழியறிந்த
என் தனிமையின் காதுகளில்
காடு அனுப்ப
கூப்பாடு போடும் அவல ஒலிகள்!
"ம்ம்ம்ம்ம்......
கருப்பையில் காத்தீர்களே
கட்டிலில் கட்டிய
கணவனென அணைத்தீர்களே
கொட்டிக் கொடுத்தான்
என் அப்பனென கூக்குரலிட்டீர்களே
காடு செல்லுமுன் உங்களுக்காய்
என் கன்னத்தில்
கடைசி துளி!"
- பாஷா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|