 |
கவிதை
தூக்கத்தை தொலைத்த ஜாதி... பாலகிருஷ்ணன்
யாரவள் தெரியவில்லை
இந்த
இருட்டு வேளையில்
குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறாள்
வானம் பார்த்து
ஏதோ யோசிக்கிறாள்
ஞாபகம் வந்தவளாய்
பூமி பார்த்து
ஏதோ வாசிக்கிறாள்
ஒன்று மட்டும் புரிகிறது- அந்த
பூவனத்தில் தீ எரிகிறது
பார்ப்பதற்கு
பள்ளி மாணவி போல் இருக்கிறாள்
பாடச் சுமையாக இருக்குமோ...
பருவப் பெண்ணாக இருப்பதால்
காதல் சோகமாக இருக்குமோ...
கற்பனை செய்யும்
அழகு பார்த்தால்
கவிதை தாகமாக இருக்குமோ...
என்னவென்று தெரியாமலே
எவளென்று தெரியாமலே
அவள் மீது எனக்கொரு பற்று
ஏனென்றால்
நானும் அவளும் ஒரே ஜாதி
தூக்கத்தை தொலைத்த ஜாதி...
- பாலகிருஷ்ணன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|