 |
கட்டுரை
நாளை.. மீண்டும்.. பாலசுப்ரமணியன்
நாட்கள் பெரும்பாலும் தொடங்கும்
நல்லபடி, மெல்ல விடியும் கதிரும்
எழும் கீழ் வானில், பதறியதாய் எழும்
முழு மானிடமும் ஆலாய் பறக்கும்
கல்விக்கும் தொழிலுக்கும் காசுக்கும்
அல்லல் பட்டு தூரம் பல பயணிக்கும்
சிரிப்பு மறக்கும் சிந்தனை மறக்கும்
தரித்த உடுப்பின் உண்மை உருவம்
வரித்த தொழிலில் மாடாய் உழைக்கும்
நெரித்த புருவமும் முறைத்த கண்ணும்
மறந்த நல் உறவும் மறைந்த நட்பும்
துறந்த உறக்கமும் துவண்ட உடலும்
உடுக்கை மாற்றி உணவு புசிக்கும்
படுக்கை விரித்து தடுக்கி விழும்
தொடர்ந்து உடல், மனதில் அலுப்பும்
அடர்ந்து படர, அதன் உள் வலியும்
நாள் முடிய நள்ளிரவினில் அடங்கும்
நாளை மீண்டும் நல்லபடி தொடங்கும்
- பாலசுப்ரமணியன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|