 |
கட்டுரை
அப்பாவின் முகம் பாலசுப்ரமணியன்
மண்ணின்றி, நீரின்றி, வேரின்றி
விண்முட்டும் கற்பனை மரங்கள்
வளரும் கிளைவிட்டு அதன் மேல்
படரும் கொடியாய் சில சிந்தனை
உலகில் தொலைந்த உயிர்கள்
பலவும் பயிராய் வாழும் மனதில்
வீட்டில் மிஞ்சிய பொருளை
போட்டு அடுக்கிய பரணாய்
நினைக்க மறந்த நிகழ்ச்சிகளும்
மறக்க நினைக்கா மகிழ்ச்சிகளும்
முக்கியமான பொக்கிஷங்களும்
முக்கியமற்ற குப்பைகளும்
பேதமில்லாமல் கலந்து இருக்கும்
வேதனைகளும் குடி இருக்கும்
மனதில் எதையோ தேடும் போது
மூலையில் தெரிந்தது அப்பாவின்..
அழகு முகமும், சிற்ப நாசியும்
அதற்குள் எனை மறந்தாயா மகனே
என்ற கேலி சிரிப்பும், கண்ணில்
எல்லையில்லா அன்பும் பரிவும்!
- பாலசுப்ரமணியன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|