 |
கவிதை
சிட்டுக்குருவியும் சந்தேகமும் பாலசுப்ரமணியன்
சிட்டுக்குருவியே..
சட்டென்று கிளை
விட்டுக்கிளை பறக்கிறாய்
சற்றே நில்..அப்படியே
சந்தேகங்கள் சில
வந்தது உன்னைப்பார்த்து
எங்கள் பகுதியில் நீயும்
எல்லா நேரமும் தடையின்றி
எவர் அனுமதியுடன் பறக்கிறாய்
என்ன படித்திருக்கிறாய்
எத்தனை வருட அனுபவம்
எதோ ஒரு தொழிலில் உனக்கு
ஓட்டுச்சீட்டோ, ரேஷன்
கடவுச்சீட்டோ அல்லது
வங்கிக்கணக்கோ உன் பேரில்
சொத்தோ சுகமோ
சொந்தமாக வீடோ உண்டா
சொல்லு மொபைல் எண்ணை
இவற்றில் ஒன்றாவது
இருந்தால் தானே உன்னை
மதிப்போம் நாங்கள், நீ ஒரு
மனிதனாய் இருந்தால் கூட!
- பாலசுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|