 |
கட்டுரை
இலையுதிர் காலம் பாலசுப்ரமணியன்
மனம் வெள்ளையாகவும்
கேசம் கறுப்பாகவும் இருக்கும்
இளமையான பிராயத்தில்
இனிமையும் அன்பும் இழையும்
வெளுக்கும் காதோரம்
வயதுகள் ஏறவும் மனம் கறுத்து
இலையுதிர் காலம் வர
தலைமுடிகள் மெல்ல உதிர்ந்து
வழுக்கையும் விழும்
வாழ்க்கையின் வளம் குறையும்
வற்றிய மனக்குளத்தில்
வசந்தமெல்லாம் வரலாறாகும்
கையில் கொஞ்சிய
கொள்ளை சிரிப்பு பிள்ளை கூட
கிழம் என்று கேலி
மொழி பேசி பார்த்து சிரித்திட
தாத்தாவிடம் ஆசி
தர வேண்டினேன் நான் - அவர்
வரும் முதுமை உனக்கும்
வாழ்நாளில் ஒருமுறை என்றார்!
- பாலசுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|