 |
கட்டுரை
காலநதி அழகிய பெரியவன்
நினைவுகள் சுழித்தோடும்
வாழ்க்கை
படித்துறைகளில் அமர்ந்து
கறைகளை
அலசிக்கொள்கிறோம்
காயங்களிலிருந்து கசியும் நிணம்
கைகளில் உறைந்த குருதி
விழிகளில் வழியும் கண்ணீர்
எல்லாமே ஒன்றுதான்
கழுவும் நீருக்கு
அடித்த கைகளால்தான்
குழந்தையின் கன்னம் வருடுகிறோம்
வஞ்சினம் கூறிய உதடுகள்தான்
முத்தமிடுகின்றன
கொன்றவர்களாலும்
தின்றவர்களும்
நிறைந்திருக்கிறது ஊர்
அடித்து
நசுக்கிக்கொன்ற
ரத்தத்தடத்தின் மீதுதான்
சக்கரங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|