 |
கட்டுரை
இதய நிலவே சு.சா.அரவிந்தன்
என்னுள்
உதிர வோட்டமாய்
கண்ணிற்கு காட்சியாய்
நீ என் நெஞ்சில்
பாறையில் பூவாய் பூத்தாய்.
உயிர் நிலவே
உறக்கத்தை உருக்குலைத்தாய்
கனவில் நிஜமாய் வந்து
கண்ணீல் படாமல் மறைகின்றாய்
கருங்கூந்தல் மேகங்களால்
காதல் மழை பொழிகிறாய்
நடையில் நட்டியம் காட்டிடும்
அன்னத்தின் உறவினராய்
சிரிப்பில் இசையை முழக்கிடும்
வண்டுகளின் ரீங்காரமாய்
சிந்தையில் என்றும் தங்கிடும்
என்னவளாய்
என் சுவாசக் கற்றாய்
என் இதய நிலவாய்...நீ
- சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|