 |
கட்டுரை
வாழ்வின் ருசி அன்பாதவன்
பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்
வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்
மெல்லத் துளிர்க்கிறது மரம்
காயம்பட்ட மனசுக்கு
மருந்திடும் உரையாடலில்
மறக்கிறது மனவலி
பரிவுறைந்த விரல்களின்
தீண்டலில் மறைகிறதென்
கண்ணீர்க்கோடுகள்
ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்
பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்
வறண்ட மனதில் மழைத்துளியாய்
வீழ்கிறதுன் புன்னகை
கவிழ்ந்த இருள் போர்த்தி
இருண்டிருக்கும் என்வானில்
ஒளி பொருத்துகிறாய்
நீ இசை
நீ ஒளி
நீ புதிர்
நீ புன்னகை
உனக்கு நானும்
எனக்கு நீயுமாக
ஊட்டிக்கொள்வோம்
வாழ்வின் ருசியை.
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|