 |
கட்டுரை
பூனைகள் அன்பாதவன்
இன்னமும் பூர்த்தியாகாத வீட்டில்
புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி
குடித்தனம் நடத்துகிறதொரு
பூனைக் குடும்பம்
மனைவியுடன் சம்பாஷிக்க வரும்
ரகஸ்ய நண்பனைப் போல
இரவின் அமைதியில் ஊடுருவி
பாத்திரமுருட்டும் பூனையொன்று
பூச்செடிக்கு அருகே
முகர்ந்து பார்க்கிறது பூனை
வாசமில்லா அழகியப் பூவை
கற்றுக் கொடுத்தது யாராயிருக்கும்
படியேறி வருகின்றன பூனைக் குட்டிகள்
பார்த்தவுடன் மிரண்டோடிப்
பதுங்குகின்றன
குரலில் வெளிப்படுவது
மிரட்சியா... மிரட்டலா..
குட்டிகளோடு சேர்த்து
ஏழோ எட்டோ இருக்கின்றன
பூனைகள்
ஆனாலும் இருக்கிறது
எலித்தொல்லை
மிக அருகருகே வாழ்கிறோம்
பூனைகளும் நானும்
உறவுகளைப் போலவே
மன நெருக்கமின்றி.
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|