 |
கட்டுரை
பழைய புகைப்படம்! அக்னிப்புத்திரன்
கண்ணில் பட்டது
பழைய புகைப்படம் ஒன்று!
அழகிய ஆலமரம்
அருகில் வரிசை வரிசையாய்
ஊழியர்களும் நிர்வாகிகளும்!
உற்றுப் பார்த்தேன்...
அழகாகச் சிரித்துக்கொண்டு சிலர்!
ஆணவமாய்ப் பார்த்துக்கொண்டு பலர்!
ஓ! இந்தக் காலங்கள்தான்
எத்தனை கணப்பொழுதில்
கரைந்து விட்டன!
புகையானோர் பாதி!
புதையுண்டோர் மீதி!
ஆனால்...
புதிய விழுதுகளுடன்
ஆலமரம் மட்டும்
இன்றும் கம்பீரமாக...!
- அக்னிப்புத்திரன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|