 |
கட்டுரை
அவரசமாய் ஒரு அவஸ்தை..?? அபிரேகா அலாவுதீன்
நேசங்களையெல்லாம்
நொடிப்பொழுதில் மறந்து விட்டு
நீ மட்டும் எப்படி நிம்மதியாய்..?
காதலின் வலி இருவருக்கும் தானே..
உனக்கு மட்டும் எப்படி
இருதயத்தில் எந்த ரணமுமில்லாமல்..?
நினைக்கக் கற்று கொடுத்ததே நீதான்..
பிறகெப்படி
மறக்க கற்றுக்கொடுக்க
மறந்து போனாய்..??
கண பொழுது நான் தாமதாய்
கல்லூரிக்கு வந்தாலே
கலங்கிப்போகும் நீ எப்படி
வருடக்கணக்கில் என் வரவை மறந்து?
உன்னைப் பார்க்காவிட்டால்
சாப்பிட பிடிக்காதென்று
சதா சொல்லும் சகி நீ எப்படி
பத்திரிக்கையை கூட
பார்சலில் அனுப்பி விட்டு
பாரின் மாப்பிள்ளையோடு
பாயாசம் சாப்பிட்டாய்..!!
ஒரு வேளை..
கல்யாண அவசரத்தில் நாம்
காதலை வி(ற்று)ட்டுவிட்டாயோ..!!!
- அபிரேகா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|