 |
கட்டுரை
இப்படிக்கு சாமானியன் (தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டே...) - ஆதவன் தீட்சண்யா
நிறைந்தும் மறைந்தும் நிரூபியாய்
மாயத்தில் நான் எங்குமிருந்து
ஒற்றனைப்போல் உம்மை கண்காணிப்பதறியாமல்
எனக்கிழைத்த அவமானங்களை நானறிவேன்
ஆத்திரம் தாளாது
அரூபம் கலைத்து வெளிப்பட்டிருப்பேனேயானால்
சுட்டுத் தள்ளியிருப்பீர்கள் என்கவுன்ட்டரில்
குறைந்தபட்சம்
பொட்டலம் விற்றதாய் பொய்வழக்கோ
பொடா வழக்கோ புனையப்பட்டிருக்கும்
பிரயோகிக்கும் கணம்வரையில்
ஆயுதங்களை மறைத்துவைத்து
துல்லியமான தருணத்திற்காக காத்திருக்கும்
தேர்ந்த வேட்டையாளியாய் பொறுமை காத்திருந்த என்னை
கையாலாகாதவனென்று பேட்டியும் பிரச்சாரமும் முடித்து
என் இடதுகை பெருவிரல் மையில் துளியெடுத்து
ஆட்காட்டி விரலுக்கு இடும்போது
நான் மெதுவே எழுந்து
நிச்சயிக்கப்பட்ட இரையைத் தின்னும் நிதானத்தோடு
என் வேட்டையைத் தொடங்கினேன்
உங்கள் கணக்குகளெல்லாம்
என் கட்டுப்பாட்டிலிருப்பதை உணர்த்தி மறைகிறேன்
கவனம் வையுங்கள்
வேட்டை எனக்கு விளையாட்டல்ல
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|