 |
கட்டுரை
கற்பிதங்களின் தண்டனை: ஆதவன் தீட்சண்யா
பொற்குவையும் சொற்குவையுமே
போதுமானதாயிருக்க
உணரலும் உணர்த்தலுமின்றி
உதவாப்பண்டமெனச் செலாவணியற்று
நெடுநாள் காத்திருந்து செத்தது அன்பு.
அதற்கப்புறம்
அழுகையோ சிரிப்போ இல்லை என்னிடம்
கோபம்கூட
மல்லாத்திப்போட்ட ஆமையின் கதியிலான பின்
அழவும் தெரியாதவனென்ற முரட்டுப்பட்டம் கனக்கிறது
உடன்பிறந்த கட்டிபோல
இதயம் இதயம் என்று கதைக்கும் யாராவதொருவர்
அதை இன்னதென்று காட்டுங்கள்
என்னிடமும் இருக்கிறதாவென்று சோதித்துக்கொள்கிறேன்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|