 |
கட்டுரை
கண்ணுக்கு கண் ஆதவன் தீட்சண்யா
குளிர்ந்த தடாகத்து பூவுள் வாசமாக
மெல்ல ஆழ்கிறேன் சாந்தத்தில்
யார்மீதும் புகாரற்று விடிகிறது பொழுது
சேகேறிய மரத்தின் கிளைகளாய் விரிந்தோடி
பிரபஞ்சத்தையே தழுவ நீளும் என்கரங்களை
தோள்பட்டையிலிருந்து தசைகிழிய முறித்து
பின்புறமாய் நெறித்துக் கட்டிய
ஜென்மாந்திர எதிரிகளிடம் புன்னகைக்கிறேன்
ரோஷங்கெட்டவனென்று
கெக்கலிக்கின்றனர் அவர்கள்
இயல்பாய் புன்னகைப்பதும்
வலிந்து கெக்கலிப்பதும்
அனிச்சையாகிவிடுகிறது பகல் இரவுபோல
ரத்தமல்லாத வேறொன்றாய்
உள்ளிருந்து முடுக்கும் வன்முறையில்
அவர்களே
அவர்களுக்கு தளைபூட்டித்
தவித்த பின்னொரு நாளில்
மதில்தாண்டி விடுவிக்கப்போன என்னிடம்
புன்னகையோ கெக்கலிப்போ
மிஞ்சியிருக்கவில்லை
நானும் அவர்களும் இல்லாததைப்போலவே.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|