 |
கட்டுரை
பகல் ஒழியும் காலத்தில்... ஆதவன் தீட்சண்யா
மாடத்தில் ஒரு மெழுகுவர்த்தி
இருக்கும் தைர்யத்தில்
தனித்திருந்தேன் அறையில்
தளிரென ஒயிலாய்
அசைந்துருகி ஒளியீந்தும்
அதன் திரியிலிருந்து
சுடர்ந்து பரவியது இருட்டு
ஒளியையே எதிர்பார்த்திருந்த
அதிர்ச்சியிலும் இருளிலும்
அமிழ்பவனுக்கு சொன்னது:
உனக்கென ஒளி வேண்டின்
பந்தமாய் கொளுத்திக்கொள்ளேன்
உன் தலைமுடியை
என்னையே உருக்க அஞ்சித்தான்
இதுகாறுமதை
தியாகவானாய் கொண்டாடிய கபடம்
எப்படித் தான் புரிந்ததோ மெழுகுவர்த்திக்கு..?
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|