 |
கட்டுரை
வல்லடி ஆதவன் தீட்சண்யா
மூர்க்கமழை
திமிறியாடும் வெள்ளம்
நீர்ப்பண்டமாய் கரைகிறது ஊரே
வீதி நிர்த்தூளியானாலென்ன
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடக்கூடாது
ஊருக்கு வந்தும் ஊருக்குள் வராத
புறவழிச்சாலை பேருந்துபோல
எங்கும் தங்காமல்
கண்காணா வெளியோடி
வெள்ளக்காடு வடிந்தபின்
சேறும் சகதியுமாய்
நிலைதளம்பிக் கிடக்கிறது திடநிலம்
தெருவில் இறங்கமுடியாது யாரும்
அதனாலென்ன
வீட்டோரம் ஒதுங்கியிருக்கும்
பிணமொன்றை நடைப்பாலமாக்கி
ஏறிக் கடந்து இலக்கை
அடைவதில் இருக்கிறது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|