 |
கட்டுரை
இப்போதெனில்.. ஆதவன் தீட்சண்யா
முடிந்தவரை
மறுக்கப்பட்டிருக்கும் அனுமதி
மீறி வருகையில்
கோட்டைக்கு வெகுமுன்பே
தடுத்து நிறுத்தி
இழுத்துச் செல்லப்பட்டிருப்பாய்
விசாரணைக்கு
மழைராத்திரியில்
நொதித்த ரொட்டித்துண்டாய்
மீன் அரித்தக்காயங்களோடு
உப்பிய உனது சடலம்
நீலம் பாரித்து
எங்கேனும் ஒதுங்கியிருக்கும்
ஒற்றைக் காற்சிலம்பை திருடி ஓடியவள்
கடலுக்குள் ஒளிய முயன்று
மூச்சுத் திணறி சாவு என்றிடும்
அரசின் அறிக்கை
அறிந்திருக்கும்
உண்மையை சொல்லமுடியாத
ஆத்திரத்தில்
பொங்கி அலைவீசும் கடற்கரையில்
காலியாகவே இருந்திருக்கும்
ஒரு சிலைக்கான இடமும்
கற்புக்கரசி பட்டமும்
இளங்கோவடிகள் கையில்
வெள்ளைத்தாள்களும்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|