மிதக்கும் மகரந்தம்
எழிலரசி
பாதம் பாவாமல் எச்சரிக்கையாக
வந்தால் உணரலாம்
எல்லா இடங்களும் மலரின் சாட்சியங்களே
அரும்பும் மொட்டுகள் இதழ்விரியும்
விரிந்த நேரத்தில் தடைபடும் கூம்பல்கள்
என வாசம் விரியும்
வீடுகளின் தோற்றங்களிலும்
எதிர்ப்படும் முகங்களிலும்
மிதக்கும் தாவும் மலர்களென
பறவைகள் விலங்குகள்
முகிழ்க்கும் தூரத்து மலைகள்
பச்சைப் பூச்செண்டுகளாய் மரங்கள்
பெருமலரொன்றின்
ததும்பும் தேனூற்றில்
மிதக்கும் மகரந்தம் நானும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|