எரிப்பதைத் தவிர...
கவிபாஸ்கர்
ஒட்டுத்துணியின்றி
அம்மணமாய்
தொலைந்து போனது
ஒவ்வொரு
தேர்தல்
திருவிழாவிலும்
சனநாயகம்..
எம் தேசத்தின் குருதியை
வயிறுமுட்டக் குடித்துவிட்டு
தெருத்தெருவாய்
‘கை’யேந்தி பிச்சைக் கேட்டு
வருகிறது
கொலைகாரக்கொடி..
கூட்டணி
கொரளிவித்தைகளும்
கூடவே கூவி வருகிறது
தலையாட்டும் பொம்மையாய்..
குடுகுடுப்பைக் குலுக்கி
பொய்யாய் குறிசொல்லி - வீட்டு
படியேறுவார்கள்
கறைவேட்டி கட்டிய கோடாங்கிகள்
கம்பியை பழுக்க வைத்து
சூடு போட மறவாதீர்!
ஒவ்வொரு முறையும்
‘கை’ நீட்டும்போது
அந்த ‘கை’ -நம்
இனத்தை சுட்டக்‘கை’
ஆயுதங்கள் அள்ளிக்கொடுத்து
தமிழரைக் கொள்ளி வைத்தக் ‘கை’
தமிழர் அறம் அறுக்கும் ‘கை’யை
அறுத்தெறிவீர்!
நம்
தோளில் அமர்ந்து
வேர்விட்ட மரத்தை
வெட்டி சாய்த்தெறிவீர்!
ஒதியம் பெருத்து
உத்திரத்திற்கு ஆகாது
எரிப்பதை தவிர...
|