இருப்பாயா நீ?
முழுநிலவன்
இரத்தப் பசியும் அடங்கிய தோடா
இனவெறிக் கழுகே இராசபக் சேவே
கொத்துக் கொத்தாய் மக்களைக் கொன்ற
கொடிய வன் நீ இராசபக் சேவே!
எந்தையர் மண்ணை இடுகா டாக்கி
இளிக்கின் றாயா இராபக் சேவே
சொந்தச் செருக்கால் பகையை வெல்லத்
துப்புக் கெட்ட இராசபக் சேவே!
ஓநாய் இந்தியக் கொல்படை உதவி
உனது வீரமா இராசபக் சேவே
சீனாக் காரன் சிறுநீர் உனக்குத்
தீர்த்த மோடா இராசபக் சேவே!
சாட்சிகள் இல்லாப் போரை நடத்திய
சாக்கொடி யவனே இராசபக் சேவே
ஆட்சி அரியணை உனக்கொரு கேடா
அவமா னமடா இராசபக் சேவே!
எத்தனை ஆயிரம் மழலைகள் எரித்தாய்
இழிகுணம் கொண்ட இராசபக் சேவே
புத்தனைப் போற்றும் அருகதை யற்ற
புல்லன டாநீ இராசபக் சேவே!
கொலையெலாம் செய்து குழிகளில் மூடிக்
கொக்கரிப் போடா இராசபக் சேவே
தலைகுனிந் தே நீ உலகவர் முன்னே
சாகப் போகிறாய் இராசபக் சேவே!
அழித்து முடித்தே ஆர்ப்பாட்ட மாக
ஆடுகின் றாய்நீ இராசபக் சேவே
செழித்த புலிப்படை திருப்பி அடிக்கச்
சிங்களன் தோற்பான் இராசபக் சேவே!
வாழும் மறத்தியர் வயிற்றில் மீளவும்
வரிப்புலி வருவான் இராசபக் சேவே
ஈழத்தை அவன் கட்டாயம் பெறுவான் -நீ
இருக்க மாட்டாயே இராசபக் சே
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|