கீழைக் கடல்
தஞ்சை வாரகி
காக்கை நாயை சுட்டால் - தினம்
காக்கவரும் மிருகவதை சட்டம்!
தமிழனை சுட்டான் சுடுகின்றான்!
தமிழர்தம் வீரமிங்கே வீழ்ந்ததுகாண்!
உலகம் எல்லாம் பரவிக்கிடந்து - நீ
உலகம் உயரநல் உறுதிகொடுத்து
மொழிக்கு மூலம்தந்த தமிழ்
ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரிப்பது என்றோ!
இந்து, முகமதியர், கிருத்துவர்
என்றோர் பிரிவு இனியில்லை,
எல்லாம் தமிழே ! எங்கும் தமிழர்
என்றோர் உறவே நிலைஇங்கே!
தமிழன் தேசம் தமிழன் உடமை நாம்
தவறி எண்ணுவது தமிழர் மடமை!
மொழியின் ஆக்கம் விழியின் கூறு
எழுவாய் தமிழா இதுஉன்தேசம்!
தமிழனைசுட்டு தண்ணீரில் விட்டான் - நம்
கீழைக்கடல் முழுதும் ரத்தம்!
முடிவின்றி தொடரும் மூடர்செயல்
முடித்து மகிழ்வோம் வா தோழா!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|