Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
புவனராஜன் கவிதை

அவசரங்களோடு வந்தும் தவற விட்ட
கடைசி நிமிட ரயில்களென
பதைபதைப்பில்
எத்தனை காதல்
சில விபத்துக்கள்
சில காத்திருப்புகள்
நீளும்
நெடுங்கூடம் தாண்டியும்
எங்கோ
இன்னும் சில அவசரங்கள்
அதனுள்
பயணிக்கும் மன யாத்திரை
கனவுகளில்
யாருமறியாமல் கூட
ஒரு பூச்செண்டை தரவோ
பெட்டகங்களை
திறக்கையில் பறவைகளை சிறகிசைக்கவோ
முத்தங்களை காற்றில் விட முடியாமல்
உதட்டிலே
இன்னும் சுமந்து கொண்டிருப்பது
எவ்வளவு கடினமானது?
அவர்கள் நடைமேடையில் ரீங்கரிக்கும்
சுவர் கோழிகளை தாண்டி
அழைப்பு விடுக்கும் தவளைகள் தாவும்
பதட்டத்தின் இரவுகளை சுமந்து
கண்டடைகிற ஊரில் பராரியாய்
ஒரு பெயருமில்லாமல் அலைகிறதென் காதல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com