புவனராஜன் கவிதை
அவசரங்களோடு வந்தும் தவற விட்ட
கடைசி நிமிட ரயில்களென
பதைபதைப்பில்
எத்தனை காதல்
சில விபத்துக்கள்
சில காத்திருப்புகள்
நீளும்
நெடுங்கூடம் தாண்டியும்
எங்கோ
இன்னும் சில அவசரங்கள்
அதனுள்
பயணிக்கும் மன யாத்திரை
கனவுகளில்
யாருமறியாமல் கூட
ஒரு பூச்செண்டை தரவோ
பெட்டகங்களை
திறக்கையில் பறவைகளை சிறகிசைக்கவோ
முத்தங்களை காற்றில் விட முடியாமல்
உதட்டிலே
இன்னும் சுமந்து கொண்டிருப்பது
எவ்வளவு கடினமானது?
அவர்கள் நடைமேடையில் ரீங்கரிக்கும்
சுவர் கோழிகளை தாண்டி
அழைப்பு விடுக்கும் தவளைகள் தாவும்
பதட்டத்தின் இரவுகளை சுமந்து
கண்டடைகிற ஊரில் பராரியாய்
ஒரு பெயருமில்லாமல் அலைகிறதென் காதல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|